நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடியைத் தாண்டியது

உள்நாட்டு பரிவர்த்தனைகள் இந்த ஆண்டில் அதிகபட்சமாக நவம்பரில் 12 சதவீதம் அதிகரித்திருக்கின்றன


மூன்று மாதங்களுக்குப் பின், நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயைக் கடந்துள்ளது.


நவம்பர் மாதம் வசூலான ஜிஎஸ்டி வருவாய் பற்றிய விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, நவம்பர் 2019-ல் 1.03 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இருந்த்தை விட 6 சதவீதம் அதிகரித்துள்ளது.

2018ஆம் ஆண்டு அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் 97,637 கோடியாக இருந்தது. சென்ற அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய் 95,380 கோடியாகக் அமைந்தது


மத்திய ஜிஎஸ்டி 19,592 கோடி ரூபாயும் மாநில ஜிஎஸ்டி 27,144 கோடி ரூபாயும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 49,028 கோடி ரூபாயும் செஸ் எனப்படும் மிகு வரி 7,727 கோடி ரூபாயும் சேர்ந்து 1,03,492 கோடி ரூபாய் நவம்பரில் வசூலாகியுள்ளது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் 20,948 கோடி ரூபாயும் மிகு வரியில் 859 கோடி ரூபாயும் அடங்கும்.